சின்னத்திரையில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் பட்டம்மா அப்பத்தா என்னும் பாம்பே ஞானம் என்பவரை பேட்டி கண்டுள்ளனர். இவர் தனது சொந்த காரணத்திற்காக சில காலம் சீரியலிற்கு வராமல் இருந்தார். இப்போது திரும்பவும் சீரியலில் இறங்கி உள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அப்பத்தா கதாபாத்திரம் இந்த சீரியலில் முடியாது. அப்பத்தா கையில் 40 வீதம் பங்கு உள்ளது இந்த கதாபாத்திரம் இல்லாமல் போனால் கதையே இல்லாமல் போய்விடும். எனவே கடைசி வரை இந்த அப்பத்தா கதாபாத்திரம் இருக்கும் என்றார்.
தமிழ்நாடு முழுதும் கேற்கிறது அந்த 40 வீதம் சொத்தில் எனக்கு எவ்வளவு தரபோறீர்கள் என்று. அந்தளவு முக்கியமான கிளைமாக்ஸ் இருக்கு. இந்த சீரியலில் பட்டம்மா கதாபாத்திரம் ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளது. படித்த அறிவான ஒரு அப்பத்தா அந்த பொண்ணுங்களை வெளியில் கொண்டு போக வேண்டும் என்று நினைக்கிறது.
பேசாமல் இருந்த அப்பத்தாவை எல்லோரும் கேட்டார்கள் ஏன் அமைதியாக இருக்கிறார் என்று அப்படி இருக்கும்போது திடீரென்று ஒரு நாள் ஜனனிக்கு ஆதரவாக பேசினார். தனியாக போய் இருந்தால் பணம் தான் சம்பாதிக்கலாம், ஆனால் இங்கு இருந்தால் தான் குடும்பத்தை திருத்தி அவர்களை சம்பாதிக்க முடியும் என்று சீரியலில் கூறுவார்.
சீரியலில் இருக்கிற 4 பேத்திமாரும் பயந்து சாவுறாங்க, ஏன்னே தெரியல 40 வீதம் ஷேர் இருக்கிறதாலயோ தெரியல. அதை கொடுக்காமல் விட்டிருவார்களோ என்றதால் பயப்பிடுறாங்கபோல. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி ஜோசிப்பாங்க, ஆனால் அவர்களை விட இன்டெலிஜென்ட்டா பாட்டி ஜோசிப்பாங்க.
இதே பாட்டி சாதாரண பாட்டியாக இருந்தால் கதையே போச்சு அவங்க ஆட்டத்தை காட்டி இருப்பாங்க, ஆனால் ஷேர் இருப்பதால் தான் பயப்பிடுறாங்க என்று சீரியலை பற்றி சிறப்பாக கூறியிருந்தார்.
Listen News!