• Sep 20 2024

ரச்சிதா சொன்னது எல்லாமே சுத்தப் பொய்... தினேஷ் பகிர்ந்த பகீர் தகவல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சரவணன் மீனாட்சி என்னும் சீரியல் மூலம் பிரபல்யமான ரச்சிதாவும், சீரியல் நடிகர் தினேஷும் சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் நன்றாக மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்த ரச்சிதா, சில கருத்து வேறுபாடுகள் காரணமாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.


இந்நிலையில் சமீபத்தில் சென்னை மாங்காடு மகளிர் காவல் நிலையத்தில் தினேஷ் மீது புகார் ஒன்றினை ரச்சிதா அளித்திருந்தார். அதாவது சில நாட்களாக தினேஷ் தனக்கு ஆபாசமாக செல்போனில் மெசேஜ் செய்து வருவதாகவும் அடிக்கடி தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து வருவதாகவும் அப்புகார் மூலமாக கூறியிருந்தார். 

இதனைத் தொடர்ந்து காவல்நிலையத்தில் ஆஜரான தினேஷ், விவாகரத்து பெற நீதிமன்றத்திற்கு போகலாம் என்று அவரிடம் கூறிவிட்டு சென்றுள்ளாராம். இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக பேட்டி ஒன்றின் மூலமாக விளக்கமளித்துள்ளார் தினேஷ்.


அந்தவகையில் அதில் வர கூறுகையில் "நான் ஆபாசமான வார்த்தையில் பேசவும் இல்லை மிரட்டவும் இல்லை. வழக்கறிஞர் சிலவற்றை வேண்டும் சொல்ல ரச்சிதாவை சொல்ல சொல்லி புகாரளித்திருக்கிறார். எங்கள் இருவரையும் சேர்த்து விசாரித்த போலிசாரிடம் ரச்சிதாவே அதனைக் கூறியிருக்கிறார்" என்றார்.

மேலும் "கொரோனா சமயத்தில் பணப்பிரச்சனையை சந்தித்தபோது அவரிடம் செலவுகளுக்கு அவரின் பங்கை மட்டும் தான் கேட்டேன். ஆனால் இரு வருடங்களுக்கு பின் நான் ரச்சிதாவிடம் காசு கேட்கவே இல்லை, ரச்சிதாவை இரண்டு வருடங்களுக்கு பின் தான் நேரில் சந்தித்தேன்" எனவும் கூறியுள்ளார். 

அத்தோடு "எங்களை பிரிக்க காரணமாக இருந்ததே ரச்சிதாவுக்கு டப்பிங் கொடுக்கும் பெண் தான், இருவரும் பேசி முடித்த பின் அந்த புகார் அப்பவே குளோஸ் ஆகிவிட்டதோடு, சட்டபடி விவாகரத்து பெற ரச்சிதாவிடம் கூறிவிட்டேன்" எனவும் தினேஷ் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement