அஜித்தின் பேச்சில், அனுபவமும், மனப்பக்குவமும், எதார்த்தமும் உண்மையும் பிறர்க்கு உதவ வேண்டுமென்கிற தூய மனமும் வெளிப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் (86) உடல் நலக்குறைவால் சென்னை வீட்டில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி காலமானார். கடந்த நான்கு ஆண்டுகளாகவே பக்கவாதம் மற்றும் வயது மூப்பின் காரணமான தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டிருந்த பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார்.எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் அஜித் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று அதிமுக சார்பில் அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ ஆகியோர் அஜித்தை நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழ்த்திரையுலகின் மிகமுக்கியமான முன்னணி நடிகர் அஜீத்குமார் அவர்களின் அன்புத் தந்தை மறைவையொட்டி மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சார்பாக முன்னாள் அமைச்சர் அண்ணன் கடம்பூர் ராஜூ அவர்களுடன் அவரது இல்லம் சென்று ஆறுதல் தெரிவித்தோம்.
கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீடித்த அச்சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுகிற வாய்ப்பு அமைந்தது. அனுபவமும், மனப்பக்குவமும் நிறைந்த அவருடைய பேச்சில் எதார்த்தமும் உண்மையும் பிறர்க்கு உதவ வேண்டுமென்கிற தூய மனமும் வெளிப்பட்டது மிகுந்த பாராட்டுக்குரியது.'எண்ணம்போல் வாழ்க்கை, எண்ணம்போல் தான் வாழ்க்கை' அன்புத் தந்தையின் ஆசியோடு தொடர்க! வெல்க!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த்திரையுலகின் மிகமுக்கியமான முன்னணி நடிகர் திரு.அஜீத்குமார் அவர்களின் அன்புத் தந்தை மறைவையொட்டி மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்களின் சார்பாக முன்னாள் அமைச்சர் அண்ணன் @Kadamburrajuofl அவர்களுடன் அவரது இல்லம் சென்று ஆறுதல் தெரிவித்தோம்.
(1/3) pic.twitter.com/cewbOYiqCW
Listen News!