• Sep 20 2024

“உடற்பயிற்சி செய்யும் குடும்பம் எப்போதும் ஒன்றாகவே இருக்கும்“- புதிய நபருடன் சமந்தா வெளியிட்ட புகைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ்,தெலுங்கு ,ஹிந்தி ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

அந்த வகையில் தமிழில் இறுதியாக காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருடன் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது சமந்தா தற்போது விஜய் தேவர்கொண்டா உடன் குஷி என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த படம் இந்த வருட இறுதியில் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக டிசம்பர் 23ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

குஷி படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அங்கு விஜய் தேவர்கொண்டா உடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று சமந்தா ஒரு நபர் உடன் ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் "ஒன்றாக உடற்பயிற்சி செய்யும் குடும்பம் எப்போதும் ஒன்றாகவே இருக்கும்" என கூறி இருக்கிறார் சமந்தா. அதனால் அந்த நபர் யார் என்கிற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்தது.

ஆர்யன் டகுபதி என்ற அந்த நபர் வேறு யாரும் இல்லை.. சமந்தாவின் பர்சனல் அசிஸ்டன்ட் தான். அவர் சமந்தாவின் முதல் படத்தில் இருந்தே அவரது அசிஸ்டென்ட் ஆக இருந்து வருகிறார். அதனால் தான் ஆர்யனை தன் குடும்பம் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement