பிரபல பாடகர் கே கே கடந்த மாதம் 30ம் திகதி காலமானார். இவருடைய அகால மரணம் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கொல்கத்தாவில் ஒரு நேரடி இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நோய் வாய்ப்பட்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் தனது ஹோட்டலுக்குச் சென்ற இவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
பிரபலங்களும், ரசிகர்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் கே கே-இன் மரணம் இயற்கைக்கு மாறானது என கொல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரின் உடல் அன்று பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியது.
என்றாலும் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தது வந்தனர்.
இந்நிலையில் கொல்கத்தா உயர் நீதி மன்றத்தில் நாளை இது குறித்து பொது நல மனு தாக்கல் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
பிற செய்திகள்
- முதன் முதலில் காதலை சொன்னது யார் ? சுவாரிஸ்ய விசயங்களை பகிர்ந்த நஸ்ரியா
- நம்ம சரத்குமாருக்கு இப்பிடி ஒரு நிலையா…தளபதி 66 குறித்து என்ன கூறியுள்ளார் தெரியுமா..?
- எஸ்.ஜே.சூர்யாவுடன் மோதவுள்ள நடிகர் விஜய்சேதுபதி-வசூலில் எது முதல் இடத்தைப் பிடிக்கும்
- விக்ரம் படத்தை மீண்டும் பார்க்கும் ரசிகை…இது தான் காரணமாம்….!
- நடிகர் அருள்நிதியா இது..? புது கெட்டப்பில் ஆளே மாறி விட்டாரே-இதோ புகைப்படம்…!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!