சமீபகாலமாக பெங்களூரில் சமூக வலைத்தளப் பக்கங்களில் இளம்பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை எடுத்து சிலர் போலியாக விபசார செயலி உருவாக்கி அதில் பகிர்ந்து இளைஞர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதனைத் தொடர்ந்து இதுகுறித்து பெங்களூர் சுத்தகுண்டே பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து மோசடியில் ஈடுபட்ட மஞ்சுநாத், மல்லிகார்ஜூன், அனுமேஷ், ராஜேஷ், மோகன், மஞ்சுநாத் என்ற சஞ்சு ஆகிய 6 பேரை உடனடியாக கைது செய்தனர்.
கைதான இந்த நபர்களில் மஞ்சுநாத் என்ற சஞ்சு ஒரு சில கன்னட படங்களில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் கூட்டாளிகள் பலருடன் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தமை தெரியவந்துள்ளது.
இவர்கள் மேற்குறிப்பிட்டவாறு இளம்பெண்களின் புகைப்படங்களை விபசார செயலியில் பதிவு செய்துள்ளனர். அதை உண்மை என்று அணுகி தொடர்பு கொள்பவர்களிடம் ஏராளமான பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறாக விபசார மோசடி வழக்கில் பிரபல நடிகர் ஒருவர் கைதானது கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!