• Sep 21 2024

தூக்கிட்ட நிலையில் பிரபல நடிகர் -அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல மலையாள நடிகர் வலம் வருபவர் நடிகர் பிரசாந்த். இபா, கர்மணி போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். நிவின் பாலி முக்கிய வேடத்தில் நடித்த ஆக்சன் ஹீரோ பிஜு படத்தில் வில்லனாக நடித்தார். பல மலையாளப் படங்களில் நடித்திருந்தாலும் ஆக்ஷன் ஹீரோ என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.

இந்நிலையில் கொச்சிக்கு அருகிலுள்ள சேரியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பிரசாத்தின் குழந்தைகள் தான் அவரின் உடலை முதலில் பார்த்துள்ளனர். பிரசாத் தற்கொலை செய்து கொண்டது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல்கள் கொடுத்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

மன அழுத்தம் அல்லது குடும்பப் பிரச்சினைகள் காரணமாக பிரசாத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவரது மனைவியும் சில மாதங்களாக அவரை விட்டு விலகி இருந்துள்ளார் என்றும் அவர் இறப்பதற்கு முன் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்

பிரசாத்தின் சடலம் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பிறகு அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது இதனிடையே பிரசாந்த் மீது போதைப் பொருள் கொண்டதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது. 2021வது ஆண்டில் செயற்கை மருந்துகளை வைத்திருந்ததற்காக கலால் துறை பிரசாத்தை கைது செய்தது மேலும் அவரிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement