மண்ணில் பிறந்த மனிதர்கள் யாவரும் ஒருநாள் மரணித்தே ஆக வேண்டும். இருப்பினும் ஒரு சிலரின் இறப்பானது அவர்கள் இறந்த பின்பும் நம் மனதில் இருந்து மறக்க முடியாது. அந்தவகையில் சமீபகாலமாக திரையுலகில் தொடர் இழப்புக்கள் இடம்பெற்று ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய வண்ணம் தான் இருக்கின்றன.
இந்நிலையில் தற்போது இலங்கையின் மூத்த பத்திரிக்கையாளரும், நடிகரும், டப்பிங் கலைஞருமான லால் சரத் குமார இன்றைய தினம் காலை காலமானதாக அவரது குடும்ப வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
மேலும் இவருக்கு தற்போது தான் 69 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இவரின் இறப்பிற்கு இலங்கை, மற்றும் இந்தியத் திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது இரங்கலினைத் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!