சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்துள்ளார். படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் இந்தப் படத்தை அடுத்து 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பில் இணைய இருக்கின்றார். இந்தப் படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி வருகிறார்.கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த இப் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் சிம்புடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார்.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறாராம்.மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகினுன்றார். இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில் சில பகுதி ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது. இந்தப் படத்தில் சிம்பு ஏ.ஜி.ஆர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது குறித்த அப்டேட் தற்போது கிடைத்துள்ளது. கௌதம் கார்த்திக் தான் தனியாக நடிக்கும் காட்சிகளை முடித்துவிட்டார்.
சிம்பு உடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் மட்டுமே மீதமுள்ளன.இந்நிலையில் வரும் மே 27-ம் தேதி முதல் சிம்பு பத்து தல படத்தின் படப்பிடிப்பில் இணைய இருப்பதாகக் தெரிவிக்கப்படுகிறது. ஜூலை மாதம் முதல் வாரத்தில் படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
பிறசெய்திகள்:
- நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நமிதா
- விஜய்சேதுபதி – சூரி கூட்டணியில் உருவாகும் விடுதலை படத்தின் புதிய அப்டேட்-குஷியில் ரசிகர்கள்..!
- நயன்தாராவிற்கு பதிவு திருமணம் முடிஞ்சுருச்சா? தீயாய் பரவும் தகவல்!
- தளபதி 66 படத்தில் விஜய் லுக் எப்பிடி இருக்கிறது தெரியுமா- இணையத்தில் கசிந்த புகைப்படம்..!
- தனுஷ் வாழ்க்கையை புரட்டிப்போட்ட அந்த நாள்…நடந்தது என்ன..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!