• Sep 20 2024

கார்கி படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ள பிரபல நடிகர்…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

"பிரேமம்" என்ற மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்கள் பலரின் மனதைக் கொள்ளை கொண்டவர் நடிகை சாய் பல்லவி. இந்த படத்தில் மலர் ரீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவியிடம் மனதை பறிகொடுக்காத இளைஞர்களே இல்லை என்று தான் கூற முடியும். அந்தளவிற்கு தனது அழகினாலும், சிறந்த நடிப்பினால் மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் தற்போது இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் "கார்கி" என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ப்ளாக்கி ஜெனி & மை லெஃப்ட் ஃபூட் புரோடக்ஸன்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் ராமச்சந்திரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, தாமஸ் ஜார்ஜ் மற்றும் கெளதம் ராமச்சந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர்.

மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் தயாராகி வரும் "கார்கி" திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அது தவிர இன்னொரு ஸ்பெஷல் என்னவெனில் மூன்று மொழிக்கான டப்பிங்கையும் அவர் தனது குரலிலேயே பேசியுள்ளார்.

இந்நிலையில் "கார்கி" படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி உள்ள நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை 2டி என்கிற தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இணைந்து நடாத்தி வருகின்ற 2டி என்கிற தயாரிப்பு நிறுவனமே இந்த உரிமையை கைப்பற்றி உள்ளது.

மேலும் இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ள சூர்யா கூறுவதாவது "நானும் ஜோதிகாவும் கார்கி படத்தில் இணைந்தது மகிழ்ச்சி. இந்த படத்தில் உள்ள சில கதாபாத்திரங்கள் நம் மனதில் நிற்கும். புதிய சிந்தனைகள் மற்றும் எழுத்துக்கள் கொண்டாடப்பட வேண்டும். உங்கள் அனைவருக்கும் கார்கி பிடிக்கும் என நம்புகிறோம்" எனவும் தெரிவித்திருக்கின்றார்.

இதனால் படக்குழுவினர் மிகுந்த சந்தோசத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement