தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்ல கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக உழைத்துக்கொண்டிருப்பவர் உலகநாயகன் கமல்ஹாசன். நடிப்பிற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்க தயங்காத நடிகர் தான் இவர்.
நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவராக திகழ்கின்றார். மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாக கமலின் படம் வெளியாகாததால் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் வருத்தத்தில் இருந்தனர். அந்த வருத்தத்தை போக்க தற்போது கமலின் விக்ரம் படம் வெளியாகி நல்ல வசூலை ஈட்டி வருகின்றது.
இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து உலகநாயகன் கமல் ஹாசன் அடுத்ததாக மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணனின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதை அவரே ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
மகேஷ் நாராயணன் இதற்கு முன் பஹத் பாசிலை வைத்து மாலிக் எனும் படத்தை இயக்கியுள்ளார்.அத்தோடு ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதாபாத்திர தேர்வு தற்போது நடைபெற்று வருகிறதாம்.மேலும் இதில் விஜய் சேதுபதி அல்லது பஹத் பாசில் வில்லனாக நடிக்க பெரிதும் வாய்ப்புகள் உள்ளது என்று தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால், அவர்கள் இருவரும் இதில் இல்லை என்றும், அந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்மூட்டியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு, மம்மூட்டியிடம் இயக்குனர் மகேஷ் நாராயணன் கதை சொல்லி, அவருக்கு பிடித்துப்போய்விட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
பிற செய்திகள்
- நயன்தாராவின் கணவரா இப்படி இருக்கிறார…? நேற்று சன்டிவியில் அம்பலமான புகைப்படம்..!
- சூரரைப்போற்று சூர்யாவின் அப்பா திடீர் மரணம்: வெளியான அதிர்ச்சிக் காரணம்!
- குக்வித் கோமாளி சிவாங்கியின் முதல் சம்பளம் இவ்வளவு தானா..? அதுகும் அவருக்கு கிடைக்கலையாம்..!
- கோபியின் கள்ளக்காதலி யார்..?உண்மையை போட்டுடைத்த ராதிகா கணவர்-பரபரப்புடன் வெளியான ப்ரமோ..!
- இரண்டாம் திருமணம் செய்யும் பிரபல சீரியல் நடிகை-வைரலாகும் மாப்பிள்ளை புகைப்படம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!