• Sep 20 2024

நயன்தாரா குறித்து சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர்–கொந்தளிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நயன்தாரா குறித்து கரண் ஜோஹர் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதனால் கடுப்பான ரசிகர்கள் கமெண்டில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகரும் இயக்குநருமான கரண் ஜோஹர் “காபி வித் கரண் ” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

அதில் தற்போது சமந்தா மற்றும் அக்ஷய் குமார் இருவரும் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷய் குமார் சமந்தாவை தூக்கி செல்வது மற்றும் நடனமாடுவது போன்ற காட்சிகள் எல்லாம் ப்ரோமோவாக வெளியாகி இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தாவிடம் கரண் ஜோஹர், ”தென்னிந்திய சினிமாவில் யார் முன்னணி நடிகை ?’ என்று நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை கேட்டுள்ளார்.

அசால்டாக இதற்கு பதிலளித்த சமந்தா, ‘இப்போதுதான் நயன்தாராவுடன் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்தேன்” என்றார்.மேலும் அவரது இந்த பதில் மூலம் நயன்தாரா தான் முன்னணி நடிகை என்று சமந்தா குறிப்பிட்டு இருக்கிறார்.

அதற்கு அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கரண் ஜோஹர், ‘என் லிஸ்டில் அப்படி இல்லையே?’ என்று கூறிவிட்டு ஓர்மேக்ஸ் மீடியா கருத்துக்கணிப்பில் சமந்தாதான் நம்பர் ஒன் நடிகை என்று இருப்பதை தெரிவித்து இருக்கிறார்.

இதனால் கடுப்பான நயன்தாராவின் ரசிகர்கள் கரண் ஜோஹருக்கு எதிரான கருத்துக்களை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement