• Sep 20 2024

பிரபல நடிகரின் மகள் தூக்கு போட்டு தற்கொலை: அதிர்ச்சியில் குடும்பம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மறைந்த நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ஆரின் மகள் உமா மகேஷ்வரி ஹைதராபாத்தில் இருக்கும் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த பிரபல தெலுங்கு நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ஆரின் மகள் உமா மகேஷ்வரி தன் குடும்பத்துடன் ஹைதராபாத்தில் வசித்து வந்தார்.

நேற்று திங்கட்கிழமை மதியம் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல்நல பிரச்சனையால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடும் என போலீசார் கூறுகின்றனர்.

உமா மகேஷ்வரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்கிற காரணம் இதுவரை தெரியவில்லை. மேலும் உடல்நலப் பிரச்சனை தான் காரணமாக இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். உமாவுக்கு தீக்ஷிதா உள்பட இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.அத்தோடு உமாவின் மகளுக்கு அண்மையில் தான் திருமணம் நடைபெற்றது.

தீக்ஷிதா தெரிவித்ததாவது….

திங்கட்கிழமை மதியம் 12 மணிக்கு தன் அறைக்குள் சென்ற அம்மா, வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை . இச் சம்பவம் நடந்தபோது வீட்டில் நான்கு பேர் இருந்திருக்கிறார்கள். உமாவின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அத்தோடு உமாவின் மரண செய்தி அறிந்ததும் சந்திரபாபு நாயுடு, கல்யாண் ராம் உள்பட பல பிரபலங்கள் அவரின் வீட்டிற்கு விரைந்து வந்தார்கள். என்.டி.ஆரின் 12 பிள்ளைகளில் உமா தான் கடைசி. என்.டி.ஆருக்கு 8 மகன்கள், 4 மகள்கள். என்.டி.ஆரின். மூன்று மகன்கள் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement