• Sep 20 2024

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தியேட்டரில் பார்த்த பிரபல நடிகரின் மனைவி-ரிலீஸிற்கு முன்பே பார்த்து விட்டாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரமாண்ட திரைப்படமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படமானது செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரமாண்ட பொருட் செலவில் உருவாக்கப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.


மேலும் இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத்,குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது.தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.


இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரெய்லரை சினிமா தியேட்டரில் அமர்ந்து பார்க்கும் வீடியோவை பதிவிட்டு இருந்தார். பொன்னியின் செல்வனுடன் அமர்ந்து பொன்னியின் செல்வனை பார்ப்பதாக குறிப்பிட்டு இருந்தார். 

மேலும் தன்னுடைய அடுத்த பதிவில், "என்னுடைய முந்தைய ஸ்டோரியில் உள்ள காட்சிகள் சென்னையில் உள்ள திரையரங்குகளில் ஒளிபரப்பாகும் ட்ரெய்லரின் காட்சிகள்! நான் ஸ்பாய்லர்களை பகிர்கிறேன் என்று நினைக்கும் சிலர்   யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ட்ரெய்லரை பாருங்கள்" என ஆர்த்தி விளக்கமளித்துள்ளார்.


Advertisement

Advertisement