• Sep 20 2024

பணமோசடி வழக்கில் பிடிபட்ட பிரபல நடிகை வெளிநாடு செல்ல அனுமதி- மனுவை வாபஸ் செய்த காரணம் தான் என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ஜாக்குலின். இவருடைய ரூ.7 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.

அதாவது டெல்லி திகார் சிறையில் இருந்தபடி மருந்து நிறுவன அதிபர் குடும்பத்திடம் ரூ.200 கோடியை சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மோசடி செய்துள்ளார். இதனால் இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் நடிகை ஜாக்குலினுக்கு இந்தப் பணத்தில் பரிசுப் பொருட்கள் வழங்கியதாகக் கூறினார்.

இதனால் நடிகை ஜாக்குலினுக்கு சொந்தமான 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதோடு தீவிர விசாரணையையும் நடாத்தி வந்தனர்.

இதனால் வெளிநாடு செல்ல அனுமதி கோரி டெல்லி நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் தான் தற்போது வெளிநாடு செல்லவில்லை என்றும் அதனால் தனது மனுவை வாபஸ் செய்வதாகவும் தற்போது மீண்டும் மனு தாக்கல் செய்து உள்ளார்.

அத்தோடு இந்த மனு ஏற்று கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement