சமந்தா ருத் பிரபு இந்தியத் திரைப்பட நடிகையும் உருமாதிரிக் கலைஞரும் ஆவார். மேலும் இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ஒரு மலையாள, தெலுங்கு இணையருக்குப் பிறந்த இவர் சென்னையில் வளர்ந்தார். மேலும் இவர் நடிப்பில் இரவி வருமணுடைய மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கியிருந்தாலும், தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேசவா முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது.
மேலும் இப்படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இத்திரைப்படத்திற்காக, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை இவர் பெற்றுக் கொண்டார்.
இவர் அதன்பிறகு நடித்த பிருந்தாவனம், தூக்குடு, சீத்தம்ம வாகிட்டிலோ சிரிமல்லி செட்டு, கத்தி போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற, தமிழ், தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெயர்பெற்ற, கூடிய சம்பளம் பெறும் நடிகைகளுள் ஒருவராக உள்ளார். மேலும் இவரது அழகும் துல்லியமான நடிப்பும் இவரை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் வைத்திருக்கின்றன.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் மகேஷ் பாபு . இவர் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியான நடிகராக வலம் வருகின்றார்.
இந்நிலையில் அவரது தந்தை இன்று மாரடைப்பால் காலமானார். மேலும் அவருக்கு திரை உலகின் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகை சமந்தாவும் ஆறுதல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்...
Listen News!