• Sep 20 2024

தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை மாயம்- தீவிரமாகத் தேடி வரும் போலீஸார்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தற்கொலை செய்து வரும் சம்பவம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் பிரபல துணை நடிகர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்மவம் ரசிகர்களை அதிர்ச்சியடையச்செய்துள்ளது.

அதாவது துணை நடிகையான திவ்யபாரதி தன்னிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக யூடியூப் சேனல் நடத்திவரும் பகலவன் என்பவர் புகார் அளித்திருந்தார்.அதற்கு மறுப்பு தெரிவித்த திவ்யபாரதி, பகலவன் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்து பகலவன் தனத் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆடியோ வெளியிட்டதால் திவ்யபாரதி தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென மாயமாகியுள்ளார் . இது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement