தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழில் தங்கச்சியாக நடித்து வந்த லாவன்யா விபத்து காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக பல சீரியல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பகல் நேரத்தில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும் சீரியல்.
இந்த சீரியலில் கதாநாயகனாக தீபக் நடிப்பதோடு கதாநாயகியாக நக்சத்திரா என்பவர் நடித்து வருகின்றார். மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகிய இந்த சீரியல் தற்பொழுது ஓரளவு வரவேற்புடனே ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் இந்த சீரியல் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இதில் தமிழின் சகோதரியாக ராகினி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த லாவண்யாவுக்கு விபத்து ஏற்பட்டதன் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளாராம்.
இதனால் இந்த ராகினி கதாப்பாத்திரத்தில் நடிக்க அஸ்விதா தேர்வாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இவர் இது தவிர விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய தேன் மொழி மற்றும் பாக்கியலட்சுமி சீரியலிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!