• Sep 21 2024

பாலியல் தொல்லை கொடுத்த நபர் பற்றி புத்தகம் எழுதிய பிரபல நடிகை -தீயாய் பரவும் தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மாடல் அழகியான நடிகை குப்ரா சேட் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து சல்மான்கான், மாதவன், ரன்வீர் சிங் போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து பிரபல்யமானார்.


நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ஸ்கேர்ட் கேம்ஸ் வெப் சீரிஸ் மூலம் தனக்கென ஓர் இடத்தை பெற்றார்.

இந்நிலையில் இந்தி சினிமாவில் பிரபல நடிகை குப்ரா சேட். இவர் தனக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளர்.

அந்தப்புத்தக்த்திற்கு ஓபன் புக்; நாட் என மெமைர் என்று தலைப்பிட்டுள்ள அவர், இளம் வயதில், தன் குடும்ப நண்பர் ஒருவரால் பாலியல் வன்முறைக்கு ஆளானதை குறித்து தெரிவித்துள்ளார்.

அதாவது,எங்கள் குடும்பத்தில் பண கஷ்டம் இருந்தது.அதை தீர்த்து வைக்க தன குடும்ப நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்து செல்வார். என்னை முத்தமிட தொடங்கினார்.ஒரு முறை அவரது ஹோட்டலில் வைத்து முத்தமிட்டு அத்து மீறினார். சத்தம் போடுவதற்கு பதிலாக குடும்ப சூழ்நிலையால் அமைதியாக இருந்து விட்டேன். இரண்டரை ஆண்டுகள் அவரது பாலியல் கொடுமைகள் தொடர்ந்தன.எனது படிப்பு முடிந்து துபாயில் குடியேறிய பின்பு அவரது தொல்லைகள் முடிவுக்கு வந்தன.

இந்த சம்பவம் குறித்து சில ஆண்டுகள் கடந்த பின் என் அம்மாவுக்கு சொன்னேன்.அவர் அழுது என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்று கூறியுள்ளார் நடிகை குப்ரா. இந்நிலையில் இவர் எழுதிய இந்த புத்தகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement