• Sep 20 2024

நடிகையின் காலில் முத்தமிட்ட பிரபல இயக்குநர் ராம் கோபல் வர்மா- அடக்கடவுளே இதற்கு இப்படி ஒரு விளக்கமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் தான் ராம் கோபால் வர்மா. ஆக்ஷன், த்ரில்லர், அரசியல், குற்றப்பின்னணி போன்ற கதைக்களத்தை கையில் எடுத்து இயக்குவதில் கைதேர்ந்தவரா இவர் எப்போது ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கியும் வருகின்றார்.

இது தவிர  எக்குத்தப்பான கருத்தை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நேரத்தில் க்ளைமாக்ஸ், நேகட் போன்ற 18+ திரைப்படங்களை ஒடிடியில் வெளியிட்டு இளசுகளின் மனதில் இடம் பிடித்தார் ராம் கோபால் வர்மா. அப்போதே பலரும் இந்த திரைப்படத்தில் வரம்பு மீறி ஆபாசம் இருப்பதாகக்கூறி குற்றம் சாட்டினார்கள். ஆனால், எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய படங்களே எடுத்து வருகிறார்.


 தற்போது இவர், இரு பெண்கள் காதலிக்கும் லெஸ்பியன் கதையை திரைப்படமாக இயக்கியுள்ளார். அந்த திரைப்படம், தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் டிசம்பர் 9ந் தேதி வெளியானது. இந்தியில் இப்படத்திற்கு டேஞ்சரஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், டேஞ்சரஸ் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக இவர்,சில தினங்களுக்கு முன் அஷு ரெட்டியின் காலை முத்தமிடும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர், படத்தை விளம்பரப்படுத்த எந்த எல்லைக்கும் செல்வதை பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது. ஒரு காலத்தில் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்த ராம்கோபால் வர்மா இப்படி மோசமாக நடந்து கொண்டது வருத்தை அளிக்கிறது என்றும், எதிர்காலத்தில் ஸ்பா மற்றும் மசாஜ் தெரபியை தொடங்க ஐடியா ஏதாவது இருக்கிறதா என்றும் மடக்கி மடங்கி கேள்வி கேட்டு வருகின்றனர்.


இந்த விமர்சனத்திற்கு டுவிட்டரில் விளக்கம் கொடுத்த ராம் கோபால் வர்மா, நடிகை அப்சரா ராணி மீது நாய் அமர்ந்து இருக்கும் போட்டோவை பகிர்ந்து நடிகை அஷுரெட்டியின் காலடியில் அமர்ந்திருந்தபோது அப்சரா ராணியின் நாய் தான் நினைவுக்கு வந்தது என்றும், காலுக்கு முத்தம் கொடுப்பதை அப்சராவின் நாயிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார்.ராம்கோபாலின் இந்த விளக்கத்தை பார்த்த ரசிகர்கள் தலையில் அடித்துக்கொண்டு இப்படி ஒரு மோசமான விளக்கமா என கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement