• Sep 21 2024

பிரபல இயக்குநர் சித்து காலமானார்... சோகத்தில் திரையுலகம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

  காதலி பட இயக்குநரான சித்து காலமானார்.இதற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் சிவகிரியை சேர்ந்தவர் 60வயதான  சித்து (எ) சித்தேஸ்வரன். இவர் சினிமா உலகில் பிரபல இயக்குநர் கங்கை அமரனிடம் உதவி இயக்குநராக கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி வந்தார். மேலும் அவருடைய முயற்சியால் 1997 ல் விக்னேஷ், தேவயானி நடித்த காதலி என்கிற படத்தை இயக்கி வெளியிட்டார்.

எனினும் அதை தொடர்ந்து மன்சூர் அலிகானை கதாநாயகனாக நடிக்க வைத்த திரைப்படம் ஆனா அந்தமடம் ஆகாட்டி சந்தை மடம் என்கிற திரைப்படத்தை இயக்கி இருந்தார். ஆனால் படம் வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் ரோஜா உள்ளிட்ட பல்வேறு தொடர்களுக்கு கதை வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் இருந்துள்ளார்.



தற்போது பாரதிராஜாவை விவசாயியாக நடிக்க வைத்து கடைமடை என்னும் பெயரில் கிராமத்து படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னையில் மரணமடைந்துள்ளார். அதை தொடர்ந்து இயக்குநர் சித்துவின் உடல் அவரது சொந்த ஊரான சிவகிரிக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

சினிமா, மற்றும் சின்னத்திரையை சேர்ந்த பிரமுகர்கள், பொதுமக்கள் சித்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். மாலை 5 மணியளவில் இயக்குநர் சித்துவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. விரைவில் திரைக்கு வர உள்ள பனை திரைப்படம் இவரது தம்பி பொன். ஆதி ஆறுமுகம் இயக்கத்தில்இன்னும் சில மாதங்களில் வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு பனை திரைப்படத்தில் இறந்த சித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சித்துவின் இறப்பால் சிவகிரி பகுதியை சார்ந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.


Advertisement

Advertisement