இந்தியத் திரைப்படத் துறையில் பன்முகம் கொண்ட கலைஞர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் கனல் கண்ணன். இவர் நடிகர் மட்டுமல்லாது திரைப்பட சண்டை ஒருங்கிணைப்பாளராகவும், சண்டை பயிற்றுவிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் விளங்கி வருகின்றார். அதுமட்டுமன்றி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளிலும் பணியாற்றி இருக்கின்றார்.
இவ்வாறாக திரைப்பிரபலங்களில் ஒருவராக இருக்கின்ற இவர் சமீபகாலமாக ஒரு சில சிக்கல்களில் சிக்கி வருகின்றார். அதாவது இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணத்தின் உடைய நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் திகதி பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், பிரபல சினிமா ஸ்டன்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பேசுகையில் "ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும்" என சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்திருந்தார்.
இவரின் இந்த பேச்சு பலருக்கும் ஆத்திரத்தை தூண்டியது. அந்த வகையில் கனல் கண்ணனின் இந்தப் பேச்சு தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளரான குமரன் சென்னை மாநகர காவல் ஆணையகத்தில் புகார் ஒன்றினை அளித்தார். அப்புகாரில் "இரு பிரிவினரிடையேயும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கனல் கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பேச்சானது பெரியளவில் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியது. இதனால் தலைமறைவாக இருந்தார் கனல் கண்ணன். இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவரைக் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Listen News!