பிரபல தயாரிப்பு நிறுவனமான LIBRA புரோடக்ஷன்ஸ்-ன் உரிமையாளர் ரவீந்தருக்கும் பிரபல சீரியல் நடிகைக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமான LIBRA புரோடக்ஷன்ஸ்-ன் உரிமையாளராக திகழ்கின்றார் ரவீந்தர் சந்திரசேகர்.
தற்போது தயாரிப்பாளராக மட்டுமன்றி யூடியூபராகவும் காணப்படும் இவருக்கும் பிரபல சீரியல் நடிகை மஹாலக்ஷ்மிக்கும் இன்று இருவீட்டாரின் சம்மதத்துடன் திருப்பதி கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
நடிகை மஹாலக்ஷ்மி சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான வாணி ராணி சீரியலின் மூலம் பெரியளவில் பிரபலமானார்
மகாலட்சுமி குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவிவந்த நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் இந்தத் திருமண செய்தி அமைந்திருக்கிறது.
இந்நிலையில் இது பற்றி பதிவு ஒன்றினை இட்டுள்ளார் ரவீந்தர்...'மகாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடைச்சா வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க... ஆனா, அந்த மகாலட்சுமியே வாழ்க்கையா கிடைச்சா... குட்டி ஸ்டோரி வித் மை பொண்டாட்டி!' எனப் பதிவிட்டிருக்கிறார். இதனை அறிந்த பலரும் இவர்களுக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!