தெலுங்கு திரை உலகில் சிறந்த இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சுதீர் வர்மா.இவர் குண்டனபு பொம்மா உள்ளிட்ட படத்திலும், செகண்ட் ஹேண்ட், Shootout at Alair உள்ளிட்ட படைப்புகளிலும் அவர் நடித்துள்ளார்.
மேலும் அப்படி ஒரு சூழலில், தற்போது விபரீத முடிவை எடுத்து சுதீர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளது ஒட்டுமொத்த தெலுங்கு திரை உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
விசாகப்பட்டினத்தில் தனது வீட்டில் வைத்து வைத்து விபரீத முடிவை சுதீர் வர்மா எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.மேலும் இது பற்றி, சுதீருடன் இணைந்து நடித்துள்ள நடிகர் உள்ளிட்ட பலரும் தங்களின் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து உறுதி செய்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக சம்பவ இடம் சென்ற போலீசார், சுதீர் வர்மாவின் உடலை மீட்டு விசாரணையை தொடங்கி உள்ளனர்.எனினும் இதன் முதற்கட்ட விசாரணையின் படி வெளியான தகவலில், சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக சுதீர் வர்மா மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அதன் காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அத்தோடு, சுதீரின் முடிவுக்கான காரணம் குறித்து தெரிய வரும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதீருடன் இணைந்து நடித்துள்ள நடிகர் சுதாகர், அவரது புகைப்படத்தை பகிர்ந்து, இந்த முடிவு தனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் இதனை ஜீரணிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தவிர, இன்னும் பல தெலுங்கு சினிமா பிரபலங்களும் சுதீர் மறைவுக்கு தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!