• Sep 20 2024

தனிமையில் இனிமை காணும் ஷிவாங்கி- என்னாச்சு எதற்காக இந்த திடீர் சோகம்-கேள்வி கேட்டு வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாடகி என்ற அறிமுகத்தோடு விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் ஷிவாங்கி. இவர் இந்த நிகழ்ச்சியில் செய்யும் சேட்டைகளும் ஏராளம். அதே போல இவருடைய மூக்கை வைத்தே ப்ரியங்காவும் மாகாபாவும் கலாய்த்து வருவதும் உண்டு

இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை அடுத்து குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார். இதனால் படவாய்ப்புக்களும் குவியத் தொடங்கியது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த டான் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் இவர் அடிக்கடி போட்டோ ஷுட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.அந்த வகையில் ரயிலில் தொங்கிய படியும் தனிமையில் இருந்து யோசிப்பது போலவும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதோடு தனிமையில் இனிமை காண்கின்றீர்களா எனக் கிண்டலடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement