தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் பிரபாஸ். சாதாரண நடிகராக இருந்த இவர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்து, அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் பான் இந்தியா நாயகனாகி விட்டார்.
இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகும் படங்கள் அனைத்தும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளிலும் தயாராகி வருகிறது. அந்தவகையில் பிரபாஸ் தற்போது 'ஆதிபுருஷ்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பிரபல இதிகாசமான ராமாயண கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் பிரபாஸ் ராமன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சீதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகையான கீர்த்தி சனோன் என்பவர் நடித்து வருகிறார்.
மேலும் இப்படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகையான சையிப் அலிகான் நடிக்கிறார். இப்படத்தின் உடைய ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது பிரபாஸுக்கும், ஆதிபுருஷ் படத்தின் நாயகி கீர்த்தி சனோனுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும், இருவரும் ஜோடியாக இணைந்து டேட்டிங் செய்து வருவதாகவும் பாலிவுட் சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாது இவர்கள் இருவரும் ஜோடியாக டேட்டிங் சென்ற விஷயம் தான் தற்போது பாலிவுட்டின் ட்ரெண்டிங்க் செய்தியாகவும் இருக்கிறது.
நடிகர் பிரபாஸை பொறுத்தவரையில் இதுபோன்ற காதல் சர்ச்சைகளில் சிக்கி வருவது புதிதல்ல. ஏனெனில் பாகுபலி படத்தில் நடித்தபோது அவரும் அனுஷ்காவும் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் ஏற்கெனவே ஏராளமான வதந்திகள் பரவின.
அதுமட்டுமல்லாது இவர்கள் இருவரும் திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாகவும் சமீபத்திலும் ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது.
இந்த நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சனோன் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கி உள்ளார் பிரபாஸ். இந்த விடயமானது ரசிகர்கள் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
இதன் காரணமாக பிரபாஸ் இறுதியில் யாரை திருமணம் செய்து கொள்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.
Listen News!