• Sep 20 2024

காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் மாற்றம்; உடனடியாக சென்னை திரும்பவுள்ள லியோ படக்குழு- ஏமாற்றத்தில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தின் டைட்டில் லியோ என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் படத்தின் டைட்டில், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் என அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு திக்குமுக்காட செய்தது.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நீண்ட வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ளார். மேலும் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தில் சஞ்சய் தத், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். சென்னை, கொடைக்கானல் என அடுத்தடுத்த இடங்களில் படத்தின் சூட்டிங் நடைபெற்றது.


இதனிடையே தற்போது காஷ்மீரில் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இதற்கென கடந்த சில தினங்களுக்கு முன்பு தனி விமானம் மூலம் படக்குழுவினர் காஷ்மீர் புறப்பட்டு சென்றனர். இதனிடையே காஷ்மீரில் கடுமையான குளிர் நிலவுவதால் இரவு நேரங்களில் படத்தின் சூட்டிங்கை எடுப்பதை படக்குழுவினர் தவிர்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து காலை 9 மணியளவில் படத்தின் சூட்டிங்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான குளிரிலும் தினந்தோறும் சூட்டிங் ஸ்பாட்டிற்கு நடிகர் விஜய் 8.15 மணிக்கெல்லாம் ஆஜராகிவிடுகிறாராம். அவரது இந்த நேரந்தவராமையை பார்த்து படக்குழுவினர் மிகுந்த ஆச்சரியம் அடைந்து வருகின்றனராம்.


சினிமாவில் தன்னுடைய 30 ஆண்டுகாலத்தை கடந்துள்ள போதிலும் தற்போதும் நேரந்தவராமையை முக்கியமான குவாலிட்டியாக நடிகர் விஜய் கடைபிடித்து வருவதாக பல இயக்குநர்கள் பாராட்டி வருகின்றனர்.


Advertisement

Advertisement