தமிழ் சினிமாவின் கலக்கல் நாயகியாக ஒரு காலத்தில் திகழ்ந்து வந்தவர் நடிகை கௌதமி. அதாவது இவர் தமிழில் ரஜினிகாந்தின் 'குரு சிஷ்யன்' என்ற படத்தில் அறிமுகமாகி 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாகளில் ஒருவராகக் கொடிகட்டி பறந்தவர்.
மேலும் 'எங்க ஊரு காவல்காரன், நம்ம ஊரு நாயகன், வாய்க்கொழுப்பு, அபூர்வ சகோதரர்கள், ராஜா சின்ன ரோஜா, ராஜநடை, பணக்காரன், ஊரு விட்டு ஊரு வந்து, அவசரபோலீஸ் 100, ருத்ரா, தேவர் மகன், நம்மவர், குருதிப்புனல்' உட்பட ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது தெலுங்கு, மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். அத்தோடு 2006 இல் வெளியான 'சாசனம்' என்ற படத்துக்கு பிறகு பல வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர் 2015 இல் 'பாபநாசம்' என்ற படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இணைந்து நடித்து இருந்தார்.
குறிப்பாக இந்தப் படமானது மோகன்லால் நடித்து மலையாளத்தில் வெற்றி பெற்ற 'திரிஷ்யம்' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி இருந்தது. பாபநாசம் படத்தினைத் தொடர்ந்து அவர் பிறகு நடிக்கவில்லை.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கௌதமி மீண்டும் நடிக்க வந்துள்ளார். அதாவது இந்தி வெப் தொடர் ஒன்றில் நடிக்கிறார். மும்பையில் நடைபெறும் வெப் தொடர் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருவதாக தெரிவித்து அது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்டு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Listen News!