• Sep 21 2024

பிக்பாஸ் தொகுப்பாளர் மாற்றப்படுகிறாரா..? காரணம் இதுவா... சோகத்தில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

திரைப்படங்களிற்கு எவ்வளவு ரசிகர் கூட்டம் உண்டோ அந்தளவிற்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிற்கும் ரசிகர் கூட்டம் உண்டு. அவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்றே 'பிக்பாஸ்'. இந்நிகழ்ச்சியானது தமிழில் 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. 


அதில் ஆரவ், ரித்திகா, முகென், ஆரவ் கடைசியாக ராஜு ஜெயமோகன் ஆகியோர் பிக்பாஸ் டைட்டில்களை வென்றுள்ளார்கள். அதுமட்டுமல்லாது இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார்.

அத்தோடு அடுத்த சீசன் வரும் அக்டோபர் மாதம் ஆரம்பமாகும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது தாமதமாகும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தான் ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஒரு சோகமான தகவல் வெளிவந்துள்ளது.


அதாவது ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 2006-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி ஹிந்தியில் இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக முடித்திருக்கின்றது. அத்தோடு இதன் அடுத்த சீசனிற்காக ரசிகர்கள் பலரும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்.

ஹிந்தியில் வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான் கானுக்கு பதிலாக இந்த சீசனை இயக்குநர் ரோஹித் ஷெட்டி நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கான காரணம் யாதெனில் சீசனிற்கு சீசன் சம்பளத்தை உயர்த்தும் சல்மான் கான் இந்த சீசனிற்கு ரூ. 1000 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. 


இது சற்று அதிகமான தொகை என்பதனால் தான் இந்நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வேறொரு நபரை தொகுத்து வழங்க அணுகியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் சல்மான் கான் இனித் தொகுத்து வழங்க மாட்டாரா என்ற சோகத்தில் உள்ளனர்.

எனினும் இந்த செய்தி எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஏனெனில் சல்மான் கான் தான் தொகுத்து வழங்குகிறார் என ஒரு சில தகவல்கள் வெளியாகிய வண்ணமும் இருக்கின்றன.

Advertisement

Advertisement