சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் இன்று மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி இருக்கிறது. ரசிகர்கள் படத்தை தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர்.மேலும் நல்ல விமர்சனங்களும் வந்துகொண்டிருப்பதால் ஜெயிலர் படத்திற்கு நல்ல ஓப்பனிங் வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் வெளியான ஜெயிலர் படத்தை ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், மற்ற ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஆரவாரத்தோடு ஒரு திருவிழாவை போல் வரவேற்றனர்.
நெல்சன் இயக்கிய இப்படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் என்கிற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரஜினி. இதில் ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணனும், அவரது மகன் கேரக்டரில் வஸந்த் ரவியும் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடித்துள்ளார்.
மேலும் கேமியோ ரோலில் மோகன்லால், தமன்னா, ஜாக்கி ஷெராப், ஷிவ ராஜ்குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.மேலும் இப்படம் இன்றைய தினம் வெளியாகவுள்ள நிலையில் ரஜினிகாந்த் நேற்றைய தினம் இமயமலைக்குச் சென்றிருந்தார். தற்பொழுது ரஜினியின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!