மன்னன் ராஜ ராஜ சோழனை பற்றி, கல்கி புனையப்பட்ட நாவலாக எழுதிய 'பொன்னியின் செல்வன்' கதையை தழுவி இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படம் வசூலிலும் 500 கோடிக்கு மேல் பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனால் படக்குழு ப்ரமோஷன் வேலைகளில் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறாக பொன்னியின் செல்வன் 2 படம் இன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ள நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை அதற்கு முன்னதாக சில குறிப்பிட்ட திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
அந்தவகையில் வரும் 21-ஆம் தேதி இதன் முதல் பாகம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரண்டாவது பாகத்துடன் முதல் பாகத்தையும் வெளியிடலாம் என்ற தனது கோரிக்கையை அடுத்து மணிரத்னம் இந்த முடிவை எடுத்துள்ளதாக நடிகர் பார்த்திபன் தகவல் தெரிவித்துள்ளார்.
Listen News!