தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபல்யமானவராக இருப்பவர் தான் ஹனி ரோஸ். இவர் தமிழில் முதல் கனவே, சிங்கம் புலி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோ பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்தும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் கேரளாவில் புதிய கடையை ஒன்றினை திறந்து வைப்பதற்காக சென்றுள்ளார். இவரின் வருகையை அறிந்த அந்த ஊரில் இருக்கும் இளைஞர்கள் கூட்டம் கூடினார்கள்.
சிலர் ஹனி ரோஸுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அவர்களை தடுக்க போலீசார் மற்றும் பவுன்சர்கள் கஷ்டப்பட்டு முயற்சித்தனர். இருப்பினும் அவர்களை தடுக்க முடியாமல் போனது.
அப்போது சிலர் ஹனி ரோஸ் மீது விழுந்தனர், கடைசியில் பவுன்சர்கள் உதவியுடன் அங்கு இருந்து கிளம்பினார் ஹனி ரோஸ். இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.
Listen News!