தமிழ் சினிமாவில் முக்கிய நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த். இவர் கடந்த பல ஆண்டுகளாக நீரிழிவு பிரச்சனையால் அவதிக்குட்பட்டுக் கொண்டு வந்தார். இதனால் அண்மையில் அவருக்கு காலில் மூன்று விரல்கள் அண்மையில் அகற்றப்பட்டன.
இது குறித்து அறிந்த சினிமா ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் வேதனை அடைந்தார்கள். எப்படி இருந்த கேப்டன் இப்படி ஆகிவிட்டாரே என்று வேதனைப்படுகிறார்கள். விரல்கள் அகற்றிய பிறகு வீடு திரும்பிய விஜயகாந்துக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இந்நிலையில் விஜயகாந்தின் உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது என்று அவரின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில் அவர் கூறியதாவது கேப்டனுக்கு ஒன்றும் ஆகாது. அவர் செய்த தான தர்மம் அவரை காக்கும். தைரியமாக இருங்க கேப்டன் என்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் விஜயகாந்தின் உடல்நலம் பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில் அவரின் வீட்டிற்கு முன்பு ஆதரவாளர்கள் தினமும் கூடுகிறார்கள்.
ஆனால் அவரை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை. அதனால் வீட்டு வாசலோடு அனைவரும் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.விஜயகாந்தை பார்க்க முடியாவிட்டாலும், அவர் வீட்டு வாசல் வரை வந்த திருப்தியில் பலரும் திரும்பிச் செல்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- புஷ்பா 2 படத்தில் இணையும் தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகன்…பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
- நடிகையுடன் தங்கியிருந்த பிரபல நடிகர்-கோட்டலிற்கு நேராக வந்த செருப்பை நீட்டிய மனைவியால் பெரும் சலசலப்பு..!
- கையும் களவுமாக சிக்கிய கோபி- நேரில் பார்த்த பாக்யாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி – இன்றைய எபிசோடு அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!