இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் 'மாமன்னன்'. இப்படத்தில் வடிவேலு மிகமுக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் வடிவேலுவும் மாமன்னன் படத்தில் ஒரு ஹீரோதானாம். பொதுவாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த வடிவேலு முதல்முறையாக இப்படத்தின் மூலமாக அழுத்தமான ரோலில் நடிப்பதனால் இப்படத்திற்கு சிறந்த வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இப்படம் வெளியாகி 8நாட்களைக் கடந்துள்ளது. அந்தவகையில் இப்படம் உலகளவில் கடந்த 8 நாட்களில் ரூ. 52 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அதில் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 40 கோடி வரை வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த விஷயமானது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!