• Sep 20 2024

சோஷியல் மீடியாவிலிருந்து திடீரென விலகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்- இது தான் காரணமா?- அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் படு பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழிலேயே உருவாகிய இந்த சீரியலை மற்ற மொழிகளில் நிறைய ரீமேக் ஆகியுள்ளது.

அண்ணன்-தம்பிகள் 4 பேரை சுற்றியே இந்த கதை இதுவரை நகர்ந்து வருகிறது. 2018ம் ஆண்டு தொடங்கிய இந்த தொடர் தற்பொழுது முடிவு கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகின்றது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன். பின்னணி நடன கலைஞராக இருந்து இப்போது பிரபலமாகியுள்ளார். தொடர் அவருக்கு பெரிய ரீச் கொடுத்துள்ளது.


குமரன் சுஹாசினி என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில் குமரன் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் ஒரு பதிவினைப் போட்டுள்ளார். அதாவது சமூக வலைத்தளப்பக்கங்களில் இருந்து கொஞ்ச நாள் விலகப்போவதாகவும், இதுவரை தனக்கு சர்ப்போட் பண்ணிய அனைவருக்கும் நன்றி என்றும் விரைவில் மீண்டும் இணைவோம் என்றும் கூறியுள்ளார்.


இதனால் ரசிகர்கள் ஒருவேளை குமரன் பிக்பாஸிற்குச் செல்லப்போகின்றாரா, அதற்காகக் தான் சோஷியல் மீடியாவிலிருந்து விலகுகின்றார? எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement