• Sep 21 2024

மீண்டும் இணையும் பிரபாஸ்-அனுஷ்கா-குஷியில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி படப்பிடிப்பின் போது 6 ஆயிரம் பெண்கள் அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து காத்திருந்தனர்.அந்த விடயம் ரசிகர்களிடத்தே செம வைரலானது. ஆனால், அனைத்து பெண்களின் கோரிக்கையும் பிரபாஸ் நிராகரித்தார்.

படத்தில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி கெமிஸ்டிரி பக்காவாக ஒர்க் அவுட்டாகி இருந்தது.அதை ஸ்டேட்டஸ் வைத்தே கொண்டாடினார்கள் பல ரசிகர்கள்.

குறிப்பாக சண்டை காட்சியில் இருவரும் இணைந்து அசத்தி இருப்பார்கள். பாகுபலி படத்தை அடுத்து இருவரும் காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. அதேபோல, சாஹோ படத்திலும் அனுஷ்காவின் பெயரை பிரபாஸ் சிபாரிசு செய்திருந்தார். மேலும் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடலை ஏற்றிய அனுஷ்காவால் மீண்டும் எடையை குறைக்க முடியாமல் குண்டாகவே இருந்தார். இதனால், அந்த கதாபாத்திரம் ஷ்ரத்தா கபூருக்கு சென்றது.

அத்தோடு பாகுபலி படத்துக்குப் பின்னர் பான் இந்தியா ஆடியன்ஸ்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸ் நடிப்பில் அண்மையில் வெளியான ராதே ஷ்யாம் படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இப்படம் பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்திருந்தார். பெரும் பொருட் செலவில் வெளியானத் திரைப்படம் தோல்வி அடைந்தது என்று தான் கூற வேண்டும். தற்போது பிரபாஸ், சலார், ஆதி புருஷ், ப்ராஜெக்ட் கே, படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீஸாக உள்னன.

இந்நிலையில் நடிகர் பிரபாஸ், இயக்குநர் மாருதியின் முழு நீள நகைச்சுவை படம் ஒன்றில் அனுஷ்காவுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இது குறித்த அறிவிப்பு தசரா சமயத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு தகவல் வெளிவந்துள்ளது. அனுஷ்கா நடித்த பாகமதி, நிஷப்தம் படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. படங்களில் நடிக்கும் வாய்ப்பு இல்லாததால், அனுஷ்கா திருமணம் செது கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் படங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement