இந்திய அளவில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் எந்த அலட்டலும் இல்லாமல் எளிமையாக இருந்து வரும் நடிகர் தான் ரஜினிகாந்த்.என்னதான் கடுமையான உழைப்பு, திறமை என எல்லாம் இருந்தாலும் நல்ல குணம் படைத்தவர் சூப்பர்ஸ்டார், அதன் காரணமாகவே அவர் இந்த உயரத்தில் இருக்கின்றார் என பலர் கூறி நாம் கேட்டிருக்கின்றோம்.
அதற்கு எடுத்துக்காட்டாக பல விஷயங்கள் நடந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு விஷயம் அரேங்கேறியுள்ளது.அதாவது பிதாமகன், கஜேந்திரா, மாயாவி என பல திரைப்படங்களை தயாரித்தவர் தான் துரை. இவர் தற்போது உடல்நலம் சரியில்லாமல் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கின்றார். மேலும் மருத்துவம் பார்ப்பதற்கு கூட வழியில்லாமல் தவித்து வருகின்றார் துரை.
நடிகர் சூர்யா துரையின் மருத்துவ செலவிற்காக உதவி செய்துள்ளார். இந்நிலையில் ரஜினி இதனை கேள்வி பட்டு துரைக்கு போன் செய்து, கவலைப்படாதீங்க நான் உங்களுக்கு உதவி செய்கின்றேன் என வாக்கு கொடுத்துள்ளார்.வாக்கு கொடுத்ததோடு மட்டுமல்லாமல் துரையின் மருத்துவ செலவு மொத்தத்தையும் ரஜினி ஏற்றுக்கொண்டுள்ளார். அவரிடம் மொத்தமாக பணமாக கொடுத்தால் சரியாக வராது என எண்ணிய ரஜினி, மருத்துவமனை செலவையும், மருந்து செலவையும் தானே ஏற்றுக்கொண்டுள்ளார்.
இது துரைக்கு பெருமளவில் நம்பிக்கையை கொடுத்துள்ளது. மீண்டும் பழைய துரையாக மீண்டு வருவார் என அவரது நண்பர்களால் நம்பப்படுகின்றது. இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் மற்றும் கோலிவுட் வட்டாரத்தை சார்ந்தவர்கள் அனைவரும் ரஜினியை புகழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாகத்தான் அவர் இன்றளவும் சூப்பர்ஸ்டாராக இருக்கின்றார் என ரஜினியை போற்றி வருகின்றனர் .
Listen News!