தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக 'யசோதா' என்ற திரைப்படம் வெளிவந்தது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படமானது வசூலிலும் சக்கபோடு போட்டது.
இப்படத்தினைத் தொடர்ந்து அடுத்ததாக சமந்தா நடிப்பில் 'சாகுந்தலம்' எனும் திரைப்படம் வருகிற ஏப்ரல் 17-ஆம் தேதி வெளியாகிறது. அண்மையில் வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர், படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் எகிற வைத்துள்ளது.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் நடிகை சமந்தா பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையில் இருந்து வந்த சமந்தா, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்திருக்கின்றார்.
இந்நிலையில் சமந்தாவின் இன்ஸ்டா ஸ்டோரியை பார்த்த ரசிகர்கள் தற்போது பதறிப்போயுள்ளனர். அதாவது கையில் பலத்த காயங்களுடன் சமந்தா கையினை புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டிருக்கின்றார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் "உங்களுக்கு என்ன ஆச்சு" எனக் கேட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது அவரின் கை முழுவதும் காயம் இருப்பதனால் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
Listen News!