• Sep 20 2024

பிரபல இயக்குநருடன் நெருக்கம்.... மாளவிகா செய்த செயல்... வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக முன்னேறி வருபவரே நடிகை மாளவிகா மோகனன். இவர் 'பேட்ட' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியான பூங்கொடியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'மாஸ்டர்' படத்தின் வாயிலாக தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தினைப் பிடித்தார். 


அதன்பின்னர் தனுஷின் 'மாறன்' படத்தில் நடித்து இருந்தாலும்  அப்படத்தில் பெரியளவில் பேசப்படாமல் போனார். இதன் காரணமாக தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடிப்பதற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றார் மாளவிகா மோகனன்.


அதாவது தற்போது இவருக்கான படவாய்ப்புகள் குறைய ஆரம்பிக்க மீண்டும் தன் பாணியில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இன்ப அதிர்ச்சியினால் ரசிகர்களை வாயைப்பிளக்க வைத்து வந்தார்.


இதனைத் தொடர்ந்து தற்போது பிரபல பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப்-புடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றினை போட்டுள்ளார்.


அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிப்பதற்காகவே அந்தப்புகைப்படத்தினை அவர் பதிவிட்டிருந்தாலும், அப்புகைப்படத்தில் அவர்கள் இருவரும் ரொம்பவே நெருக்கமாக இருக்கின்றார்கள்.

இதனால் ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே "எதற்காக இவ்வளவு நெருக்கம்" என சமூக வலைத்தளங்களின் வாயிலாக கேட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement