• Sep 21 2024

'காற்றுக்கென்ன வேலி' சீரியலில் காத்திருக்கும் அதிர்ச்சி... இப்போ வேணாம் எனக் கூறிக் கமெண்டுகளை குவிக்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல்வெறு ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் சூப்பர் ஹிட்  சீரியல்கள் மற்றும் ரியாலிட்ரி ஷோக்களை தொகுத்து வழங்குவதில் விஜய் டிவி முன்னணி வகித்து வருகின்றது.


அந்தவகையில் இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று எப்போதுமே ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. அவ்வாறு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த ஒரு ஹிட் சீரியல் தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியல் ஆனது முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது. 


அதாவது காதல், குடும்பம், சமூக பிரச்சனை என எல்லாம் கலந்த கலவையாக இந்த சீரியல் கதை அமைந்துள்ளது. அத்தோடு இந்த சீரியலில் அடிக்கடி பரபரப்பு திருப்பங்களும் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது.


இந்நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது 'காற்றுக்கென்ன வேலி' சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கின்றதாம். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்போது தான் இந்த சீரியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதால் முடிக்க வேணாம் எனக்கூறி ரசிகர்கள் கவலையுடன் தங்களது கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement