• Sep 21 2024

பல லட்சத்தில் சம்பளம் பெற்றா இப்படித்தான்-பிரியா பவானி சங்கரை விமர்சிக்கும் ரசிகர்கள்..இது தான் காரணமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கைவசம் பல படங்களுடன் வளரும் இளம் நடிகைகள் பட்டியலில் இருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். 

இவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். நடித்த ஒரே ஒரு சீரியல் மூலம் மேயாதமான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களின் வாய்ப்பு கிடைத்து வெள்ளித்திரை நடிகையாக பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறார்.



பின் மான்ஸ்டர், மாஃபியா, ஹாஸ்டல், ஓ மனப்பெண்ணே, யானை போன்ற படங்களில் நடித்தும் வந்தார். தற்போது திருச்சிற்றம்பலம், பொம்மை, அகிலன், ருத்ரன் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.

திருச்சிற்றம்பலம் படத்தினை முடித்துவிட்டு அந்த படத்தினை பார்க்காமல் கூட பிரியா பவானி சங்கர் வெளிநாட்டுக்கு சென்று விட்டார். இவ்வாறுஇருக்கையில் பல ஆண்டுகளாக காதலித்து வரும் காதலருடன் பிரான்ஸ் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று ஊர்சுற்றி வந்தார்.


எனினும் தற்போது, சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் ஃபோகஸ் என்று பதிவிட்டு போனை பார்ப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், கடந்த இரு மாதங்களாக யூரோப்பிய நாடுகளிலேயே செட்டிலாகிவிட்டார் பிரியா பவானி சங்கர்.

இவ்வாறு இருக்கையில் இதனை  பார்த்த நெட்டிசன்கள் பல லட்சத்தில் சம்பளம் பெற்றா இப்படிதான் கையிலே பிடிக்க முடியாது என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.





Advertisement

Advertisement