• Sep 21 2024

கல்லைக் கொண்டு மகாலட்சுமியை அடிக்க சொல்வேன்... பழைய வீடியோவைப் பகிர்ந்து ரவீந்தரை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

தயாரிப்பாளராக பலராலும் அறிப்பட்டவர் தான் ரவீந்தர். இவர் நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர். இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை போன வருடம் திருமணம் செய்து கொண்டார். 

சிலர் வாழ்த்து கூறி இருந்தாலும் பலர் எதிர்மறை விமர்சனக்கருத்தையே முன்வைத்தார்கள். ஆனாலும் இத்தம்பதி அவ்வாறாக விமர்சனங்களுக்கு செவி சாய்க்காது தமது வாழ்க்கையை மிகவும் சந்தோசமாக முன்னெடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு மோசடி வழக்கில் ரவீந்தரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். இதனையடுத்து மகாலட்சுமி வந்த நேரம் சரி இல்லை, அதனால் தான் அவரை போலீஸ் கைது செய்து விட்டனர் எனப் பலரும் நெகட்டிவ் கருத்துக்களை பரப்பி வந்தனர். 

இந்நிலையில் ரவீந்தர் மல்காலட்சுமியை கல்யாணம் செய்து கொண்ட புதிதில் நேரலையில், தன்னுடைய மனைவி குறித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது கேமராவிற்கு முன் வருமாறு ரவீந்தர் கூறுகின்றார். அதற்கு மகாலட்சுமி நான் கேமெரா முன் வரமாட்டேன்" என கூறினார்.

அதற்கு ரவீந்தர் "நீ ஒரு நடிகை கேமரா முன் வராமல் என்ன செய்வாய், சரி இனி அப்படி மீறி நீ வந்தால் கல்லை கொண்டு ஏறிய சொல்வேன்..” என மிகவும் கிண்டலாக கூறியுள்ளார். தற்போது ரவீந்தர் சிறையில் இருக்கும் நேரத்தில் இந்த வீடியோவை மீண்டும் வைரலாக்கி வரும் ரசிகர்கள் "ஆயிரம் தான் இருந்தாலும் மனைவியை நேரலையில் இப்படியா சொல்வது" எனக் கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement