சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. ஆதி குணசேகரனாகவே ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்த இவர் ஒரு திறமையான நடிகர்.
எதிர் நீச்சல் சீரியலின் முழு வெற்றிக்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது, அதாவது இந்த சீரியலை தூக்கி நிறுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பது ஆதிகுணசேகரன் கதாபாத்திரம் தான். சீரியல் மட்டுமன்றி ஒரு சில படங்களிலும் நடித்து இருக்கின்றார்.
அதாவது ‘பரியேறும் பெருமாள், கொம்பன், ஜீவா' ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது. அதுமட்டுமல்லாது 'கண்ணும் கண்ணும் மற்றும் புலி வால்' ஆகிய திரைப்படங்களை இயக்கியுமுள்ளார். மேலும் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற 'ஜெயிலர்' படத்திலும் நடித்திருந்தார்.
இவ்வாறாக பன்முகத்திறமை கொண்ட இவர் சமீபத்தில் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தமை அவரது குடும்பத்தினரை மட்டுமன்றி, சீரியல் குழுவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து இவரின் இறுதிச் சடங்குகள் சம்பிரதாய முறைப்படி இடம்பெற்றன.
இந்நிலையில் மாரிமுத்துவின் குடும்ப வழக்கப்படி கணவர் இறந்தால் மனைவியின் தாலியை கணவனின் போட்டோவிற்கு முன்னால் வைப்பதுதான் வழமை. ஆனால் மாரிமுத்துவின் மனைவி தனது கணவன் எப்போதுமே தன் கூடவே இருக்கணும் என்பதற்காக, அவரின் நினைவாக அந்தத் தாலியை ஒரு செயினாகவோ அல்லது மோதிரமாகவோ மாற்றி அதை பயன்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய கணவர் நம்பிக்கைக்கு முரணானவர் என்பதனால் அவர் நான் எடுத்த இந்த முடிவை ஆதரிப்பார் எனவும் கூறியுள்ளார். எது எவ்வாறாயினும் தனது கணவன் தன்னுடைய கணவன் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதற்காக மாரிமுத்துவின் மனைவி எடுத்த முடிவைப் பார்த்து ரசிகர்கள் விரைந்துள்ளனர்.
Listen News!