சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக 'எதிர்நீச்சல்' மாறியுள்ளது. இந்த சீரியலில் ஆதிரைக்கு சமீபத்தில் கரிகாலனுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.
அதில் பாங்கிற்குச் சென்று கதிர் ஜீவானந்தத்தின் பி.ஏ. ஃபர்ஹானா அடிக்கிற மாதிரி பேச ஃபர்ஹானா மரியாதையாகப் பேசுங்க என்று சொல்ல கதிர், எனக்கெல்லாம் என்னடி மரியாதை என்று அடிக்க போக ஃபர்ஹானா கதிரின் கையை மடக்கிப பிடிக்கின்றார்.
தொடர்ந்து அங்கு வரும் ஜனனி நீ தானே வீட்டுக்கு வந்து அப்பத்தாவின் கைரேகையை எடுத்தபொண்ணு உன்னோட வந்த ஆளு எங்கே என்று கேட்கின்றார். அப்போது ஃபர்ஹானா என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் நிற்கின்றார். இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!