• Sep 20 2024

ஜீவாவைப் பிரிக்க மாமனார் போட்ட திட்டம்... கண் கலங்கி அழும் மூர்த்தி... முகத்தில் கரியைப் பூசிய மீனா... சூப்பரான 'Pandian Stores' promo..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் . அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.


அதில் மீனாவின் தந்தை ஜீவாவைப் பார்த்து "மாப்பிள்ளை இனிமேல் நாங்க இங்க இருக்க வேணாம், எந்தப் பிரச்சினையாய் இருந்தாலும் நம்ம வீட்டில் போய் நாம பேசிக்கலாம்" எனக் கூறி ஜீவாவின் கையைப் பிடித்து இழுக்கின்றார். 


இதனைப் பார்த்த மூர்த்தி "யாரைப் பார்த்து யார் வீட்டிற்கு கூப்பிடுறீங்க, இவன் என் தம்பிங்க இவன் என் உசிரு, இவன் எங்க கூடத்தான் இருப்பான், எங்ககூட தான் வாழுவான்" எனக் கூறிக் கண் கலங்குகின்றார். ஆனால் மீனாவின் தந்தையோ ஜீவாவை கூட்டிச் செல்ல விடாப்பிடியாக நிற்கின்றார்.


இதனையடுத்து மாமனாரின் கையை உதறித் தள்ளிய ஜீவா நான் அங்க வரல என்கிறார். பின்னர் மீனாவைப் பார்த்து பிள்ளையை தூக்கிட்டு வா நாம நம்ம வீட்டிற்குப் போவோம் என தந்தை கூறுகின்றார். அதற்கு மீனா என் புருஷனுக்கு மரியாதை இல்லாத இடத்தில நான் எப்படி இருக்க முடியும் எனக் கோபத்துடன் கூறி தந்தையின் முகத்தில் கரியைப் பூசுகின்றார். 


இதனையடுத்து மீனாவின் தந்தையும் கோபத்துடன் கிளம்பிச் செல்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துளளது.    


Advertisement

Advertisement