• Sep 20 2024

பிரபல பாடகர் மீது பெண் பலாத்கார புகார்: அதிரடியாக போலீசார் செய்த செயல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!


பிரபல பாலிவுட் பாடகரான ராகுல் ஜெயின் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் பாடகரும், இசையமைப்பாளருமான ராகுல் ஜெயின் மீது 30 வயது ஸ்டைலிஸ்ட் ஒருவர் மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அவர் தன் புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது

இன்ஸ்டாகிராம் மூலம் ராகுல் என்னை தொடர்பு கொண்டார். என் வேலையை பாராட்டினார். அந்தேரி பகுதியில் இருக்கும் தன் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார் என்றார்.

மேலும் அந்த புகாரில் மேலும் தெரிவித்திருப்பதாவது....அவருடைய பர்சனல் ஸ்டைலிஸ்டாக என்னை நியமிப்பதாக  தெரிவித்தார். ஆகஸ்ட் 11ம் தேதி ராகுலின் வீட்டிற்கு சென்றேன். தன் உடைகளை காட்டுவதாகக் கூறி படுக்கையறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று அதில் கூறியுள்ளார்.



அந்த பெண்ணின் புகாரின்பேரில் ராகுல் மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக ராகுல் ஜெயின் கூறியிருப்பதாவது, அந்த பெண்ணை எனக்கு தெரியாது. அவர் தெரிவித்துள்ள புகார் பொய் மற்றும் ஆதாரமற்றது. அத்தோடு முன்பும் கூட ஒரு பெண் என் மீது இதே போன்று புகார் அளித்தார். ஆனால் அதில் எனக்கு நீதி கிடைத்தது. இந்த பெண் அவரின் கூட்டாளியாக இருக்கலாம் என்றார்.

முன்னதாக பாலிவுட் பாடலாசிரியை ஒருவர் ராகுல் தன்னை பலாத்காரம் செய்து, கட்டாயப்படுத்தி கருவை கலைக்க வைத்து, ஏமாற்றிவிட்டதாக கடந்த அக்டோபர் மாதம் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேலும் ஒரு பெண் ராகுல் மீது பலாத்கார புகார் அளித்திருக்கிறார். இதனால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement