மலையாள சினிமாத் தயாரிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் இயக்குநர் மகேஷ் நாராயணன். இவர் தயாரிப்பாளர், இயக்குநர், திரைக்கதை வசனம் எழுதுபவர், எடிட்டர் மற்றும் ஒளிப்பதிவாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட ஒரு நபராகவும் விளங்கி வருகின்றார். அத்தோடு மலையாளத்தில் மட்டுமன்றி தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு எனப் பல மொழிப் படங்களில் இயக்குநராகவும், திரைக்கதை வசனம் எழுதுதல், எடிட்டர் மற்றும் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவரது இயக்கத்தில் வெளிவந்த படங்களாக 'சீ யு சூன் ,மாலிக் ,ஷெர்லோக், டேக் ஆப்' போன்ற படங்களைக் குறிப்பிடலாம். மேலும் இவர் தனது பன்முகப்பட்ட ஆளுமையை சினிமாவில் வெளிப்படுத்தியமையால் பல விருதுகளையும் வென்றிருக்கின்றார்.
இந்த நிலையில் இவர் உரையாடல் ஒன்றில் 'மலையன் குஞ்சு' என்ற நாவலை திரைப்படமாக எழுதுவது, படமாக்குவது தொடர்பிலும், அத்தோடு பார்வையாளர்கள் மற்றும் OTT தளங்களின் தேர்வுகள் கடுமையாக மாறிவிட்ட இந்த நேரத்தில் அதை வெளியிடுவது பற்றியும் கூறியிருகின்றார்.
இதுமட்டுமல்லாது இதனுடன் சம்மந்தப்பட்ட பலதரப்பட்ட விடயங்களையும் மனம் திறந்து அப்பொது வெளியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பகிர்ந்துள்ளார். மேலும் இவரிடம் "திரைப்படங்களை வெளியிடுவது குறித்து மக்கள் எவ்வாறு நினைக்கின்றார்கள்" என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.
இதற்கு இவர் "கொவிட்-19 இற்கு பிறகு திரைப்படங்கள் யாவும் சர்க்கஸ் போல் செயல்பட வேண்டும் என்று பார்வையாளர்கள் விரும்புகிறார்கள்" என சுவாரசியமான கருத்து ஒன்றினை தெரிவித்து இருந்தார். இவர் கூறிய இந்தப் பதிலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிற செய்திகள்
- தேவதை போல் ஜொலிக்கும் லொஸ்லியா…வைரலாகும் இன்ஸ்டாப் பதிவு..!
- பிரபல நடிகரின் பட ஷூட்டிங்கை நிறுத்திய பெண் அதிகாரி…என்னம்மா இப்பிடி பண்ணிட்டீங்களே..!
- சிம்புவிற்கு வலை விரிக்கின்றாரா அமலா பால்…குழம்பிப் போயுள்ள ரசிகர்கள்..!
- விஜய் சேதுபதியின் பள்ளிப் பருவக் காதல்…யார் அந்த ஜானு..?அவரே கூறிய உருக்கமான சம்பவம்…!
- “நானே ஷாக்கிங்ல தான் இருக்கேன்”…ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள பானுப்ரியாவின் சகோதரி…அவரே கூறிய சுவாரஷியமான தகவல்…!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!