• Sep 20 2024

நாய்க்குட்டிக்கும் பிளைட் டிக்கெட்டா..? நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த ராஷ்மிகா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா. தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த கீதாகோவிந்தம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் பிரபலமான நடிகையாக மாறினார்.

இதன்பின் நடித்த படங்களின் மூலம் இந்தியாவில் பிரபலமான இவர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்றி கொடுத்தார். இன்று தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். இவருக்கு ஹாலிவூட், பாலிவுட் என பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

அந்தவகையில், தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக கடந்த டிசம்பர் 18 இல் வெளியான திரைப்படம் புஷ்பா. இத்திரைப்படத்தில் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை ராஷ்மிகா. இப்படம் நல்ல வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்று இவருக்கென்று ஒரு தனித்துவமான ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். மற்றும் ஏற்கனவே இவர் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தின் பாகம் 2 இலும் நடிக்க உள்ளார். இவ்வாறு ஹாலிவுட் ,பாலிவுட், டோலிவுட் என பிஸியாக இருக்கும் ராஷ்மிகா படப்பிடிப்பிற்காக அடிக்கடி விமானத்தில் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது.

அந்த சமயத்தில் தனது செல்ல நாய் குட்டியையும் அவர் கூடவே அழைத்து செல்வதாகவும் தன்னோடு சேர்த்து தனது நாய்க்கு விமானத்தில் டிக்கெட் போட்டால் தான் சூட்டிங் வருவேன் என அவர் தயாரிப்பாளர்களிடம் கடுமையாக சொல்லி விட்டதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதை பார்த்து கோபம் கொண்ட நடிககை ராஷ்மிகா, "நீங்கள் என் நாய் குட்டியை என்னுடன் பயணிக்க சொன்னாலும் அது வராது. அது ஐதராபாத்தில் உள்ள எனது வீட்டில் சந்தோஷமாக உள்ளது. உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி" என டுவிட்டர் வாயிலாக விளக்கம் அளித்து நெட்டிசன்கள் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement