• Sep 20 2024

ரஜினி ,நெல்சனைத் தொடர்ந்து அனிரூத்திற்கும் காசோலை வழங்கிய jailer பட தயாரிப்பாளர்- செம குஷியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கலாநிதி மாறன் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்திருந்தார். இந்தப் படம்  600 கோடி வசூலை எட்டி புது சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இதனால் படக்குழுவினர் செம குஷியில் இருக்கின்றனர். இப்படியான நிலையில் அண்மையில் இப்படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் இயக்குநர் நெல்சனுக்கும் ரஜினிகாந்திற்கும் விலை மதிப்பான காரை பரிசாக வழங்கியிருந்தார்.


இந்த நிலையில் தற்பொழுது இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அனிரூத்திற்கு காசோலை வழங்கியிருக்கின்றார். இது குறித்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.


ஜெயிலர் படத்திற்கு மட்டுமல்லாமல் கடந்த ஒரு சில ஆண்டுகளாக வெளியாகும் படங்களின் வெற்றிகளுக்கு அனிருத்தின் இசை மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் வெற்றிக்கும் அனிருத்தின் இசை முக்கிய காரணமாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement