• Sep 20 2024

விடுதலை படத்தைத் தொடர்ந்து விஜய்யை வைத்து புதிய படம் எடுக்க முடிவெடுத்த இயக்குநர் வெற்றிமாறன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய இயக்குநராக வலம் வருபவர் தான் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் தற்பொழுது விடுதலை என்னும் படம் உருவாகி வருகின்றது. இப்படத்தில் கதாநாயகனாக சூரி நடித்து வருகின்றார். இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் வேலைகளை வெற்றிமாறன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாடிவாசல் படத்தின் ப்ரீ போட்டோஷுட் நடத்தப்பட்டு, தமிழகம் முழுவதிலும் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் வரவழைக்கப்பட்டு, அதில் சில காளைகளின் தேர்வு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த காளைகளுடன் சூர்யா தற்போது பயிற்சி எடுத்து வருகிறாராம். இந்த கேப்பில் விடுதலை படத்தின் வேலைகளை முடித்து விடலாம் என வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், விஜய்யை சந்தித்து ஏற்கனவே கதை சொன்னதாகவும், சில காரணங்களால் அந்த படம் பண்ண முடியாமல் போனதாகவும் வெற்றிமாறன் கூறினார் . வெற்றிமாறனுடன் ஒரு படத்தில் இணைய காத்திருப்பதாக விஜய்யே கூறியதால், வெற்றிமாறன் புதிய கதை ஒன்றினை விஜய்க்காக தயார் செய்திருப்பதாகவும், விரைவில் அவரை சந்தித்து கதை சொல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement